மானசரோவர்
From Wikipedia, the free encyclopedia
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும்.[1] மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். இந்தப் பிரதிபிம்பம் ’சிவமும் சக்தியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம்’ என்ற கருத்தில் ’கௌரி சங்கர்’ என்று அழைக்கப்படுகிறது. இக்குளம் 51 சக்தி பீடங்களில் தேவியின் வலது உள்ளங்கை விழுந்த பீடமாகும்.
விரைவான உண்மைகள் மானசரோவர், அமைவிடம் ...
மானசரோவர் | |
---|---|
அமைவிடம் | திபெத் |
ஆள்கூறுகள் | 30°40′25.68″N 81°28′07.90″E |
மேற்பரப்பளவு | 320 km2 (120 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 90 m (300 அடி) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 4,556 m (14,948 அடி) |
உறைவு | குளிகாலத்தில் |
மூடு
இதன் அருகே இராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த இராட்சதலம் ஏரியின் தீவில் இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.இந்த ஏரி மானசரோவருக்கு மேற்கில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. கைலாச யாத்திரை செல்லும் யாத்திரிகர்கள் இந்த ராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.