புல்வெளி
From Wikipedia, the free encyclopedia
புல்வெளி அல்லது புன்னிலம் என்பது பரந்துவிரிந்த ஓரளவு தட்டையான புல் நிலப்பகுதியாகும். சில மில்லிமீற்றர் உயரப் புற்கள் முதல் 2.1 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் வேர்நீளமும் கொண்ட புற்கள் ஈறாகப் பலவகையான புற்களைக் கொண்ட புல்வெளிகள் உலகில் காணப்படுகின்றன.
புல்வெளி என்பது புற்கள் மற்றும் மரம் அல்லாத சிறு தாவரஙகள் வாமும் இடமாகும்.[1] புல்வெளியானது சூழ்நிலையியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புல்வெளியில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் செழித்து வாழ்கிறது. ஏனெனில், அவ்வாழிடம் திறந்த வெளியாகவும், சூாிய வெளிச்சம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் நன்றாக ஈர்த்துக்கொள்ளும் படியும் அமைந்துள்ளது. இதே போன்ற தட்பவெப்பம் வேறு எங்கும் காணமுடியாது. புல்வெளியானது இயற்கையாக காணப்படும் அல்லது செயற்கையான முறையில் புதர்செடிகள் அல்லது மரவகைகளை அழித்துவிட்டு கூட அமைக்கலாம். புல்வெளிகளில் தாவரங்கள் போதுமான அளவில் இருந்தால் பலவிதமான வனவிலங்கு கூட்டத்தை பெருக்குவதுடன், விலங்குகள் இணை சேர்வதற்கான இடமாகவும், கூடு கட்டுவதற்கு, உணவு சேகாிப்பதற்கு மற்றும் சில நேரங்களில் வாழிடமாகவும் அமைகிறது. நிறைய புல்வெளிகளில் பரந்த வாிசையில் காட்டுமலர்கள் காணப்படுகின்றன இவை மகரந்தசேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கையில் ஈடுபடக்கூடிய புசிசியினங்கள் தேனீகள் போன்றகற்றை கவர்ந்திழுக்கப் பயன்படுகின்றன. மேலும் அந்த சூழ்நிலையியல் முழுவதும் மகரந்தசேர்க்கை நடைபெற உதவுகின்றன. விவசாயத்தில், புல்வெளி என்பது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளால் வழக்கமாக மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் கால்நடைகளானது தேவையற்ற தாவரங்கள் உற்பத்தி ஆகாமல் தாவரங்களை தடையின்றி வளர அனுமதிக்கிறது. விவசாயம்