பத்மசிறீ
இந்திய அரசில் நான்காவதாக குடிமக்களுக்கு வழங்கப்பெறும் உயர் விருது / From Wikipedia, the free encyclopedia
பத்மஶ்ரீ (பத்மஸ்ரீ) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்குப் பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. பாரத ரத்னா,பத்ம விபூசன்,பத்ம பூசன் விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது வரிசையில் அமைந்துள்ளது. 2012 வரை, 2497 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[3] 2013-இல், 80 பேருக்கு வழங்கப்பட்டது.[4]
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
பத்மஶ்ரீ | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | தேசிய விருது | |
நிறுவியது | 1954 | |
முதலில் வழங்கப்பட்டது | 1954 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2014 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 2679 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நாடா | ||
விருது தரவரிசை | ||
பத்ம பூசன்[1] ← பத்மஶ்ரீ → சர்வட்டோம் யுத்த சேவா பதக்கம்[2] |
மூடு