நயாத்
கிரேக்க புராணங்களில் தோன்றும் ஒரு வகை பெண் ஆவி / From Wikipedia, the free encyclopedia
நயாத் ( Naiad ) என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் ஒரு வகை பெண் ஆவியாகும். இது நீரூற்றுகள், கிணறுகள், அருவிகள், நீரோடைகள், மற்றும் பிற நன்னீர் பகுதிகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இவை ஆறுகளின் கடவுள்களிலிருந்து வேறுபட்டவைகள். இவைகள் ஆறுகளை உள்ளடக்கியவைகள். மேலும், மற்றும் சதுப்பு நிலங்கள், குளங்கள் மற்றும் ஆர்கோசிலுள்ள மைசீனியனுக்கு முந்தைய இலெர்னா போன்ற குளம்-ஏரிகளின் அமைதியான நீரில் வசிக்கும் பழமையான ஆவிகள்.
விரைவான உண்மைகள் குழு, உப குழு ...
'ஜான் வில்லியம் வாட்டர்ஹவுஸ் வரைந்த 'நயாத்', 1893; | |
குழு | புராணக்கதை |
---|---|
உப குழு | நீரில் வசிக்கும் ஆவி இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினம்[1] |
வாழ்விடம் | நல்ல தண்ணீரில் வசிக்கும் |
மூடு
இவை பழங்காலத்தவர்களிடையே மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டன. மேலும் ஆடுகள், மது, தேன் மற்றும் எண்ணெய் ஆகியவை அவைகளுக்கு வழங்கப்பட்டன. சில சமயங்களில் பால், பழம் மற்றும் பூக்களை மட்டுமே பிரசாதமாக வைத்து வழிபட்டனர்.