சேர் சா சூரி
இந்தியாவில் சூரி பேரரசை நிறுவியவர் (1472-1545) / From Wikipedia, the free encyclopedia
சேர் சா சூரி (Sher Shah Suri; 1486 - மே 22 1545) வட இந்தியாவில் தில்லியை தலைமையாகக் கொண்டு ஆண்ட சூர் வம்சத்தை நிறுவிய முதலாவது அரசராவார்.[2][3] இவரது இயற்பெயர் பரீத் கான். இவர் சேர் கான் என்றும் அரசர்களில் சிங்கம் என்றும் அறியப்படுகிறார். இவரது நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை நீர் வடிகால் முறைகள் முகலாயர்களால் தொடரப்பட்டது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
சேர் சா சூரி | |||||
---|---|---|---|---|---|
சூர் வம்சத்தின் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | 17 மே 1540 – 22 மே 1545 | ||||
முடிசூட்டுதல் | 1540 | ||||
முன்னையவர் | உமாயூன் | ||||
பின்னையவர் | இஸ்லாம் ஷா | ||||
பிறப்பு | 1486[1] சாசாராம், ரோத்தாஸ் மாவட்டம், பீகார், இந்தியா | ||||
இறப்பு | 22 மே 1545 கன்னோசி, கன்னாஜ் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||
புதைத்த இடம் | |||||
மலிகா பீபி | |||||
குழந்தைகளின் பெயர்கள் | Jalal Khan | ||||
| |||||
மரபு | சூர் வமிசம் | ||||
அரசமரபு | சூர் வம்சம் | ||||
தந்தை | மியான் ஹசன் கான் சூர் | ||||
மதம் | இசுலாம் |
பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த சேர் சா சூரி 1540இல் முகாலயர் மன்னர் உமாயூனை வென்று முகலாயப் பேரரசைக் கைப்பற்றினார். 1540 முதல் 1545 முடிய தாம் இறக்கும் வரையில் வட இந்தியாவின் பெரும்பகுதிகளை ஆண்டார். இவருக்குப் பின் இவரது மகன் இஸ்லாம் ஷா ஆட்சியேறினார்.[4][5][6][7][8]
பாபரின் ஆட்சியில் முகலாய இராணுவத்தில் ஒரு தனியார் படைப்பிரிவில் பணியாற்றிய செர் சாசூரி பின்னர் படைத்தளபதியாக உயர்ந்தார். பின்னர் பாபர் ஆட்சியின் கீழ் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1537 இல் பாபரின் மகன் ஹுமாயூன் பயணத்தில் இருந்தபோது சேர் சா சூரி வங்காள மாகாணத்தில் சூர் வம்ச அரசை நிறுவினார்.[9] இதனால் ஏற்பட்ட போரில் 1539 ஆண்டு முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்களத்தில் தோற்கடித்ததார். மிகச் சிறந்த அரச தந்திரியான சேர் சா சூரி தன்னை ஒரு உயர் திறன் வாய்ந்த நிர்வாகியாகவும் சிறந்த ஆளுநராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். இவர் செய்த சீரமைப்புப் பணிகள் இவருக்குப் பின்னர் வந்த முகலாய அரசர்களுக்கு குறிப்பாக ஹுமாயூனின் மகனான அக்பர் போன்றோருக்கு முகலாய அரசை வழிநடத்திச் செல்ல ஒரு அடித்தளமாக அமைந்தது.[9]
1540 முதல் 1545 வரையிலான இவரது ஐந்தாண்டு கால ஆட்சியில் இவர் குடிமை மற்றும் இராணுவ நிர்வாகங்களை புதிதாகஅமைத்தார். இவர் வெளியிட்ட 'ருபய்யா' என்னும் வெள்ளி நாணயம், பிற்காலத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் உரூபாய் என்னும் பணத்திற்கு முன்னோடியாகும்.[10] மேலும் இவர் இந்திய அஞ்சல் துறையை புணரமைத்தார்.[11] ஹூமாயூன் நிர்மாணித்த நகரமான தினா-பானா என்ற நகரை புணரமைத்து அதற்கு சேர் கர் எனும் பெயரிட்டார். மேலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாகத் திகழ்ந்த பாடலிபுத்திரத்தைப் புதுப்பித்து பாட்னா எனவும் மாற்றினார்.[12] மேலும் பீகார் காட்டுப்பகுதியில் ஒரு வளர்ந்த புலியை வெறும் கைகளால் கொன்று புகழ் பெற்றார்.[4][9] மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலையாகவும் கிழக்கில் வங்காள தேசத்தின் சிட்டகாங்கில் தொடங்கி கங்கை நதிக் கரையோரமாகவே கைபர் மற்றும் கடந்து, பெஷாவர் வழியாக இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் வழியாகவும் செல்லும் கிராண்ட் டிரங்க் சாலையை சேர் சா சூரி ஆப்கானிஸ்தானின் காபூல் வரை விரிவு படுத்தி மேம்படுத்தினார்.[13]
பீகார் மாநிலம் சாசாராமில் உள்ள இவரது நினைவிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (ஆங்கிலம்: UNESCO) உலக பாரம்பரியக் களமாக அறிவிக்க வேண்டுமென்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.[14]