சப்த நதிகள்
From Wikipedia, the free encyclopedia
சப்த நதிகள் (சமக்கிருதம்: सप्त सिंधु-சப்த சிந்து -ஏழு நதிகள்/ஆறுகள்) இருக்கு வேதம் (சமக்கிருதம்: ऋग्वेद - ரிக்வேத) இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்றான இருக்கு வேதத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின், பஞ்சாப் பகுதியில் ஓடும் நதிகளில் ஏழு நதிகளை புனிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- சரசுவதி ஆறு (தற்போது பூமிக்கடியில் மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது)
- சிந்து நதி
- விதஸ்தா (ஜீலம் ஆறு)
- அசிக்னி (செனாப் ஆறு)
- பருஸ்சினி (ராவி ஆறு)
- விபாஸ் (பியாஸ் ஆறு)
- சுதுத்திரி (சத்லஜ் ஆறு)