உயிரெழுத்து
From Wikipedia, the free encyclopedia
ஒலிப்பியலில், உயிரொலி (Vowel) என்பது, தொண்டைக்குழியின் ஊடாக வெளியேறும் மூச்சுக்காற்று, பேச்சுக் குழலில் எவ்விதமான தங்கு தடைகளும் இன்றி வெளியேறும்போது உருவாகும் ஒலிகளுள் ஒன்றைக் குறிக்கும். அதாவது, உயிரொலிகளை ஒலிக்கும்போது தொண்டைக் குழிக்கு மேல் எவ்வித காற்று அழுத்தமும் ஏற்படுவதில்லை. இது மெய்யொலிகளின் ஒலிப்பில் இருந்து வேறுபட்டது. மெய்யொலிகளை ஒலிக்கும்போது பேச்சுக்குழலின் ஏதாவது ஒரு பகுதியில் முழுத்தடையோ அல்லது ஓரளவு தடையோ ஏற்படுகின்றது. உயிரொலி, அசையொலியும் ஆகும். உயிரொலியைப் போன்று திறந்த, ஆனால் அசையில் ஒலி அரையுயிரொலி எனப்படுகிறது.[1][2][3]