பிள்ளையார்
நர்த்தன, கற்பக, விக்ன, பால, மாணிக்க, சக்தி, உச்சிஷ்ட, வல்லப, சித்தி, முக்குறுணி, கருத்து விநாயகர் / From Wikipedia, the free encyclopedia
பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள்.[2][3] விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் பிள்ளையார், அதிபதி ...
பிள்ளையார் | |
---|---|
அதிபதி | அனைத்திற்கும் பூதகணங்களுக்கும் புதிய தொடக்கம் நிறைவேறுதல் மகிழ்ச்சி |
வேறு பெயர்கள் | விநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர், கணபதி, ஐங்கரன், ஆனை முகன் |
தேவநாகரி | गणेश |
சமசுகிருதம் | கணேஷா |
தமிழ் எழுத்து முறை | பிள்ளையார் |
மந்திரம் | ஓம் கணேசாய நமஹ |
ஆயுதம் | பாசம், அங்குசம், தந்தம், வேதாளம், சத்தி(வேல்), அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, நாகபாசம், சூலம், குந்தாலி, மழு முதலான அனைத்து ஆயுதங்களும் [1] |
துணை | சித்தி, புத்தி |
பெற்றோர்கள் | சிவபெருமான், பார்வதி அம்மை |
சகோதரன்/சகோதரி | முருகப்பெருமான் |
குழந்தைகள் | சுபன், லாபன், சந்தோசி மாதா |
வாகனம் | சுண்டெலி (மூஞ்சுறு) |
நூல்கள் | கணேச புராணம், விநாயகர் அகவல் |
சமயம் | காணாதிபத்தியம் |
விழாக்கள் | விநாயகர் சதுர்த்தி |
மூடு
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்தக் காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள், விநாயகரைத் "தும்பிக்கை ஆழ்வார்" என்று அழைப்பார்கள்.[4][5]