பிரூசு சா துக்ளக்
தில்லியை ஆட்சி செய்த சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
சுல்தான் பிரூசு சா துக்ளக் (Sultan Firuz Shah Tughlaq) (1309 – 20 செப்டம்பர் 1388) துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஆவார்.[1] இவர் 1351 முதல் 1388 வரை தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்தார்.[2][3] குசராத்தில் கலகம் செய்த துருக்கிய அடிமைப் பழங்குடியினரான தாகிக்கு எதிராக சிந்துவில் உள்ள தட்டாவில் முகம்மது பின் துக்ளக் போர் புரிந்தபோது இறந்தார். சுல்தானகத்தின் வரலாற்றில் முதன்முறையாக, அதிகாரத்தை யாரும் ஏற்கத் தயாராக இல்லாத சூழ்நிலை அப்போது இருந்தது. பிரூசை பொறுப்பேற்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அந்த நேரத்தில், முகமது பின் துக்ளக்கின் பிரதமரான கவாஜா ஜஹான், முகமது பின் துக்ளக்கின் மகன்[4] எனக் கூறி ஒரு சிறுவனை அரியணையில் அமர்த்தினார். பின்னர் அவரும் சரணடைந்தார். பரவலான அமைதியின்மை காரணமாக, பிரூசின் சாம்ராச்சியம் முகம்மதுவை விட மிகவும் சிறியதாக இருந்தது. வங்காளம் மற்றும் பிற மாகாணங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளால் சுதந்திரத்தை வழங்கும் கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. இவர் இசுலாமியச் சட்ட முறைமையை தனது ஆட்சி முழுவதும் நிறுவினார்.[5]
பிரூசு சா துக்ளக் | |||||
---|---|---|---|---|---|
பிரூசு சா துக்ளக் இபின் மாலிக் ரஜாப் | |||||
பிரூசு சா துக்ளக் | |||||
19வது தில்லி சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் | 23 மார்ச் 1351 – 20 செப்டம்பர் 1388 | ||||
முன்னையவர் | முகம்மது பின் துக்ளக் | ||||
பின்னையவர் | துக்ளக் கான் | ||||
பிறப்பு | 1309 ஜான்பூர் | ||||
இறப்பு | 20 செப்டம்பர் 1388 (வயது 78–79) ஜான்பூர் | ||||
புதைத்த இடம் | 20 செப்டம்பர் 1388 ஜான்பூரிலுள்ள் பிரூசு சா கல்லறை | ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு | துக்ளக் | ||||
அரசமரபு | துக்ளக் வம்சம் | ||||
தந்தை | மாலிக் ரசாப் | ||||
தாய் | பீபி நைலா | ||||
மதம் | சுன்னி இசுலாம் இசுலாம் |