பாரத் மண்டபம்
From Wikipedia, the free encyclopedia
பாரத் மண்டபம் (Bharat Mandapam), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ளது. இந்திய அரசின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் 150 ஏக்கர் பரப்பளவில் ஓவல் வடிவில் நிறுவப்பட்ட பாரத் மண்டப வளாகம், பன்னாட்டு வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு வர்த்தக மாநாடுகள் நடத்துவதற்கு கட்டப்பட்டது. [2][3]ஐந்து நிரந்தர கண்காட்சி அரங்குகள் மற்றும் எந்த வகையான கண்காட்சிக்கும் ஏற்ற கட்டிடங்கள் உள்ளன. நேரு பெவிலியன், அணுசக்தி பெவிலியன் மற்றும் பாதுகாப்பு பெவிலியன் ஆகியவை இங்கு நிரந்தரமாக அமைந்துள்ள அரங்குகளில் அடங்கும்.
பாரத் மண்டபம் | |
---|---|
பாரத் மண்டபம் (IECC) | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் |
நகரம் | புது தில்லி |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 28°37′10″N 77°14′33″E |
துவக்கம் | 26 சூலை 2023; 9 மாதங்கள் முன்னர் (2023-07-26) |
கட்டுவித்தவர் | இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு |
உரிமையாளர் | இந்திய அரசு |
உயரம் | 12 மீட்டர்கள் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலை நிறுவனம் | அர்கோப் நிறுவனம் ஐடாஸ் (சிங்கப்பூர்) [1] |
முதன்மை ஒப்பந்தகாரர் | என்பிசிசி (இந்தியா) நிறுவனம் சப்பூர்ஜி பொல்லான்சி கம்பெனி |
பிற தகவல்கள் | |
பொது போக்குவரத்து அணுகல் | தில்லி மெட்ரோ, உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையம் |
வலைதளம் | |
www |
பாரத் மண்டப வளாகத்தில் 4.2 மில்லியன் சதுர அடி பரப்பில் உலகத் தாரம் வாய்ந்த மாநாட்டு மையத்தில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 1.5 இலட்சம் சதுர அடியில் 6 கண்காட்சி மண்டபங்கள், கீழ் தளங்களில் வாகனங்கள் நிறுத்தங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு 9-10 செப்டம்பர் 2023 நாட்களில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு நிகழ்ச்சி ஆகும்.[4]