நந்தி தேவர்
From Wikipedia, the free encyclopedia
நந்தி (சமக்கிருதம்: नन्दि, தமிழ்: நந்தி, கன்னடம்: ನಂದಿ, தெலுங்கு: న౦ది) என்பது சிவபெருமானின் தங்குமிடமான கயிலை மலை நுழைவாயிலை-பாதுகாக்கும் தெய்வம் ஆகும். இவர் வழக்கமாக ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார். சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கருதப்படுகிறார்; அதாவது சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.[1]
நந்தி | |
---|---|
நந்திதேவர் | |
வேறு பெயர்கள் | நந்தீசர் |
தேவநாகரி | नन्दि |
வகை | சிவபெருமானின் வாகனம் |
இடம் | கயிலை மலை |
மந்திரம் | ஓம் தத் புருஷாய வித்மகே
சக்ர துண்டாய தீமஹி தந்நோ நந்தி ப்ரசோதயாத் |
துணை | சுயப்பிரகாசை |
சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.[2]