ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (Harry Potter and the Prisoner of Azkaban) என்பது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட ஆரி பாட்டர் தொடரின் மூன்றாவது நூலாகும். இப்புத்தகத்தின் கதை ஆரி பாட்டர் என்ற ஹாக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் மூன்றாவது வருடம் மந்திர வித்தைகளை பயில்வது தொடர்கிறது. இத்தொடர் ஆரி பாட்டரும் அவனது நண்பர்களான ரொனால்ட் வீசுளி மற்றும் ஹெர்மாயினி கிறேன்ஜெர் ஆகியோருடன் சேர்ந்து வோல்டமோர்ட் எனும் கொடியவனின் விசுவாசியாக இருந்தவனும், ஆசுக்கபான் சிறையில் இருந்து தப்பித்த முதல் மனிதனுமான சீரியசு பிளாக் என்ற கொலைகாரனைப் பற்றி ஆராய்வது பற்றி கூறுகிறது.
ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் ஆரி பாட்டர் நூல்கள் | |
---|---|
![]() 1999இல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான அசல் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தக உறை. | |
ஆசிரியர் | ஜே. கே. ரௌலிங் |
வகை | புனைவு |
வெளியீட்டாளர்கள் | புலூம்பரி (UK) (2010-தற்போதும்) ஆர்த்தர் ஏ. லெவின்/ இசுகொலசுடிக்கு (US) ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010) |
வெளியீடு | 8 சூலை 1999 (ஐஇ) 8 செப்டெம்பெர் 1999 (ஐஅநா) |
புத்தக இல. | மூன்றாவது |
விற்பனை | 68,000 பிரதிகள் (ஐஇ) |
கதை காலவரிசை | 31 சூலை 1993 – 12 June 1994 |
அத்தியாயங்கள் | 22 |
பக்கங்கள் | 317 (ஐஇ) 435 (ஐஅநா) |
சொற்கள் | 107,253 (ஐஅநா)[1] |
ISBN | 0-7475-4215-5 |
முன் புத்தகம் | ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்) |
பின் புத்தகம் | ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்) |
இப்புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் 8 சூலை 1999 புலூம்சுபெரியால் வெளியிடப்பட்டது. மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 8 செப்டெம்பெர் 1999இல் இசுகொலாசுடிக் இங்.கால் வெளியிடப்பட்டது.[2][3][4][5] ரௌலிங் இப்புத்தகத்தை எளிதாக எழுதி முடித்தார். ரௌலிங் இப்புத்தகத்தை தொடங்கியதிலிருந்து ஒரு வருடத்தில் எழுதி முடித்தார். ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 68,000 பிரதிகளாக விற்கப்பட்டது. மற்றும் தற்போது வரை மூன்று மில்லியனுக்கும் மேலான புத்தகங்கள் விற்கப்பட்டன.[6] இப்புத்தகம் 1999 விட்பிரெட் குழந்தைகள் புத்தக விருது, பிராம் இசுடோக்கர் விருது, 2000 ஆண்டிற்கான சிறந்த கற்பனை நாவலுக்கான லோகசு விருது, மற்றும் சிறந்த நாவலுக்கான குகொ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது.
இந்நாவலை மையமாக கொண்டு நாவலின் பெயரிலேயே ஒரு திரைப்படம் 2004இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் $796 மில்லியன் வருவாயை ஈட்டியது. இந்நாவலை மையமாகக் கொண்டு ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற பெயரில் பல்வேறு தளங்களில் கணணி நிகழ்பட ஆட்டமும் வெளியிடப்பட்டது. இது பல சாதகமான விமர்சனங்களை பெற்றது.