வீரராஜேந்திர சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (பொ.ஊ. 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.
விரைவு காரணி
பொ.ஊ. 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள் | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 1063 - பொ.ஊ. 1070 |
பட்டம் | இராஜகேசரி வர்மன் |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | அருள்மொழிநங்கை |
பிள்ளைகள் | மதுராந்தகன் கங்கைகொண்ட சோழன் இராஜசுந்தரி |
முன்னவன் | இராஜேந்திர சோழன் II |
பின்னவன் | அதிராஜேந்திர சோழன் |
தந்தை | இராஜேந்திர சோழன் I |
பிறப்பு | அறியப்படவில்லை |
இறப்பு | பொ.ஊ. 1070 |
மூடு
இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.