யசலாலக்க தீசன்
From Wikipedia, the free encyclopedia
யசலாலக்க தீசன் (Yassalalaka Tissa) என்பவன் கி.பி முதலாம் நூற்றாண்டில் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஆவான். இவனது ஆட்சிக் காலம் கி.பி.52 முதல் கி.பி.60 வரை நீடித்திருந்தது. இவனது தந்தை இளநாகன் ஆவான். இவன் தனது உடன்பிறப்பான சந்தமுகன் என்பவனிடம் இருந்து ஆட்சியைப் பெற்றான். இவனுக்குப் பின்னர் சுபகராஜன் என்பவன் ஆட்சி அமைத்தான்.