மிலொசு முற்றுகை
கிமு 416 பெலோபொன்னேசியன் போரின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
மிலொசு முற்றுகை (Siege of Melos) என்பது ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே நடந்த போரான பெலோபொன்னேசியப் போரின் போது கிமு 416 இல் நடந்த ஒரு முற்றுகைப் போராகும். மிலொசு என்பது ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கு கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர்கள் (68 மைல்கள்) தொலைவில் உள்ளது. மிலொயன்கள் எசுபார்த்தாவுடன் மூதாதையர் உறவுகளைக் கொண்டிருந்தாலும், அவர்கள் போரில் நடுநிலை வகித்தனர். கி.மு 416 கோடையில் ஏதென்சு மிலொசு மீது படையெடுத்தது. மிலொயன்கள் சரணடைந்து ஏதென்சுக்கு கப்பம் செலுத்த வேண்டும் அல்லது அழிவை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்தது. அதற்கு மிலெயர்கள் மறுத்துவிட்டனர், எனவே ஏதெனியர்கள் அந்த நகரத்தை முற்றுகையிட்டனர். மிலொசு நகரம் குளிர்காலத்தில் சரணடைந்தது. அதன்பிறகு ஏதெனியர்கள் மிலொசில் இருந்த வயதுவந்த ஆண்கள் அனைவருக்கும் மரணதண்டனை அளித்து, பெண்களையும், குழந்தைகளையும் அடிமைப்படுத்தினர்.