முளையம்
From Wikipedia, the free encyclopedia
முளையம் (embryo) எனப்படுவது, மெய்க்கருவுயிரி (Eukaryote) உயிரினங்களில், ஆண், பெண் பாலணுக்கள் கருக்கட்டலுக்கு உட்பட்டு உருவாகும் கருவணுவானது, தனது முதலாவது கலப்பிரிவின் பின்னர், பிறப்பு அல்லது குஞ்சு பொரித்தல், அல்லது முளைத்தல் வரை கொண்டிருக்கும் இருமடிய, பல்கல ஆரம்ப விருத்தி நிலையாகும். கருவணுவிலிருந்து முளையம் உருவாகி விருத்தியடைவதனை முளைய விருத்தி என்பர்.
மனிதரில் கருக்கட்டலின் பின்னர் 8 வாரங்கள் வரைக்குமே பொதுவாக முளையம் என அழைக்கப்படும். கருக்கட்டலின் அதன் பின்னர் அல்லது முதிர்கரு என அழைக்கப்படுகிறது. முளையத்தைப் பற்றிய படிப்பு முளையவியல் எனப்படும்.
பாலியல் தொடர்பு மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களில், விந்தானது, சூல்முட்டையுடன் கருக்கட்டிய பின்னர் தோன்றும் கருவணுவானது, இரு பெற்றோரிடமிருந்தும் அரை அரைவாசி டி.என்.ஏ.யைக் கொண்ட இருமடிய உயிரணுவாக இருக்கும். இது பின்னர் இழையுருப்பிரிவு எனப்படும் கலப்பிரிவுக்கு உட்பட்டு பல்கல நிலையில் விருத்தியடையும். இந்த செயல்முறையால் தனியன் உருவாதலுக்கான ஆரம்பநிலையே முளையமாகும்.