முதலாம் வீர வல்லாளன்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் வீர வல்லாளன் ( Veera Ballala I 1102-1108 ) என்பவன் ஒரு போசாள மன்னனாவான் இவன் இரியங்காவுக்கு பின் பட்டத்துக்குவந்த மன்னனாவான். இவன் ஒரு சமண சமயப் பற்றாளனாவான். இவன் குறுகிய காலமே ஆட்சிசெய்தான். இவன் ஆட்சி மேலைச் சாளுக்கியர்களுக்கு அடங்கியதாகவே இருந்தது. சுயாட்சி பெற இவன் செய்த முயற்சியை மேலைச் சாளுக்கிய மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தன் முறியடித்துத் தனது மேலாண்மையை நிலைநாட்டினான்.