மு. வரதராசன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் பேராசிரியர் முனைவர் மு. வரதராசன், பிறப்பு ...
பேராசிரியர் முனைவர் மு. வரதராசன் | |
---|---|
![]() மு. வரதராசன் | |
பிறப்பு | திருவேங்கடம் 25 ஏப்ரல் 1912 வேலம், வட ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா, (தற்போது இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 10 அக்டோபர் 1974(1974-10-10) (அகவை 62) மதராசு, (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா |
புனைபெயர் | மு.வ. |
தொழில் | தமிழ்ப் பேராசிரியர் எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | MOL, MLit,Ph.D |
காலம் | 1938 முதல் 1974 வரை |
வகை | ஆய்வுக் கட்டுரைகள் புதினங்கள் |
கருப்பொருள் | தமிழிலக்கியம் வரலாறு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்ய அகாதெமி |
துணைவர் | இராதா |
பிள்ளைகள் | அரசு, பாரி, நம்பி |
மூடு
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.[1]