மிட்டிலீனியன் கிளர்ச்சி
From Wikipedia, the free encyclopedia
மிட்டிலீனியன் கிளர்ச்சி (Mytilenean revolt) என்பது பெலோபொன்னேசியன் போரின்போது நடந்த ஒரு நிகழ்வாகும். அப்போது லெஸ்போஸ் தீவையும் அதில் உள்ள மிட்டிலீனி நகரத்தையும் ஏதெனியன் பேரரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஏதென்சின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மிட்டிலீனி கிளர்ச்சி செய்ய எண்ணம் கொண்டது. கிமு 428 இல், மிட்டிலீனியன் அரசாங்கம் எசுபார்த்தா, போயோட்டியா மற்றும் தீவில் உள்ள சில நகர அரசுகளுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபடத் திட்டமிட்டது. அதற்கேற்ப நகரத்தை பலப்படுத்துவதன் மூலம் கிளர்ச்சிக்குத் தயாராகி, நெடிய போருக்கான தளவாடங்களை சேகரித்தது. கிளர்ச்சி சதி பற்றி அறிந்த ஏதென்சு தன் கடற்படையைக் கொண்டு இந்த ஏற்பாடுகளில் குறுக்கிட்டது. அதன்பிறகு மிட்டிலினியர்கள் ஏதென்சிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதிகளை அனுப்பினர். ஆனால் அதே நேரத்தில் எசுபார்த்தாவிற்கும் இரகசியமாக தூதர்களை அனுப்பி ஆதரவைக் கோரினர்.
மிட்டிலீனியன் கிளர்ச்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
பகுதியாக பெலோபொன்னேசியன் போர் | |||||||
| |||||||
கிமு 427 இல் கிளர்ச்சி அடக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏதென்சு அரசில் பிரபலமான விவாதம் நடந்தது, அதில் மிட்டிலினின் வயதுவந்த அனைத்து ஆண்களுக்கும் மரண தண்டனை அளிக்க சட்டசபை உத்தரவிட்டது, ஆனால் ஒரு நாள் கழித்து அந்த உத்தரவை மாற்றப்பட்டது. |
லெஸ்போஸ் தீவில் அனைத்து நகர அரசுகளும் ஏதென்சுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்ட நிலையில் மிதிம்னா நகரம் மட்டும் அதில் இருந்து ஒதுங்கி ஏதென்சுக்கு ஆதரவாகவே இருந்தது. இதனால் மிதிம்னாவை பிற நகரங்கள் நெருக்கத் துவங்கின. தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் கூட்டாளியான மிதினாவை மிட்டிலினியர்கள் அடிபணியவைக்க விரும்புவதை ஏதெனியர்கள் விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியாக ஏதெனியன் கடற்படை மிட்டிலீனியை கடல் வழியாக முற்றுகையிட்டது. மிட்டிலீனிக்கு ஆதரவக ஒரு கடற்படையை தயார் செய்த ஸ்பார்டா பின்னர் ஏதெனியன் படையெடுப்பால் பயந்து, அந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தது. இதற்கிடையில், லெஸ்போசில், 1,000 ஏதெனியன் ஹாப்லைட்டுகள் வருகைதந்து தரையிலும் தலைநகர் மிட்டிலீயை முற்றுகையிட்டனர். சுமார் இரண்டு ஆண்டுகள் இந்த முற்றுகை நீடித்தது. இறுதியாக ஸ்பார்டா கிமு 427 கோடையில் ஒரு கடற்படையை அனுப்பிய போதிலும், அது மிகவும் தாமதமாகவே வந்தது ஆனால் அது வந்து சேர்வதற்கு முன்பே மிட்டிலீயா சரணடைந்த செய்தி கேட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.
மிலிட்டிலீனியர்கள் சரணடைந்ததை அடுத்து, அவர்களுக்கு என்ன தண்டனை விதிப்பது என்பது குறித்து ஏதென்சில் சூடான விவாதம் நடைபெற்றது. கிளியன் தலைமையிலான ஒரு பிரிவினர், மிலிட்டினி நகரத்தில் உள்ள அனைத்து ஆடவர்களையும் தூக்கிலிட்டு, பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்க வேண்டும் என்று வாதிட்டனர். டியோடோடஸ் தலைமையிலான மற்றொரு பிரிவினர் மிதமான தண்டனையை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். முடிவில் கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஆடவர்களுக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. விவாதத்தின் முதல் நாளில் நகரத்தில் அனைத்து ஆண்களுக்கும் மரணதண்டனை விதிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாள் நடந்த விவாதத்தில் ஒரு சேர அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில், முந்தைய தீர்ப்பு மாற்றப்பட்டு நகர ஆடவர்கள் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் 1,000 "தலைவர்கள்" (இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்பட்டாலும், ஒரு எழுத்தாளரின் தவறான வாசிப்பின் காரணமாக, அந்த எண்ணிக்கை உண்மையில் 30 ஐ நெருங்கியதாக நம்பப்படுகிறது) விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர்.