தமிழ் திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
மாரி செல்வராஜ் (Mari Selvaraj) என்பவர் தமிழ் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குனர் ராமிடன் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். பத்திரிக்கையாளராக சில வருடங்கள் பணியில் இருந்த இவர், ஆனந்த விகடனில் "மறக்க நினைக்கிறேன்" என்ற தொடரை எழுதியுள்ளார்.[2][3]
மாரி செல்வராஜ் | |
---|---|
பிறப்பு | 7 மார்ச்சு 1984[1] புளியங்குளம், திருநெல்வேலி, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2006–முதல் |
மாரி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ஆவார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார்.
சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்த இவர் ராமிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.