1848ம் ஆண்டு கலகம் அல்லது மாத்தளைக் கலகம் இலங்கையில் பிரித்தானிய ஆளுனர் டொரிங்டன் பிரபுவின் தலைமையில் இருந்த பிரித்தானியக் குடியேற்ற அரசிற்கு எதிராக 1848 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமான கலகமாக கொள்ளப்படுகின்றது.
1848 கலகத்துக்கான காரணிகள்
- கோல்புறூக் விதந்துரைப்புக்களால் உள்நாட்டு மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டமை.
- இராஜகாரிய முறை ஒழிப்பால் விவசாயம் புறக்கணிக்கப்பட்டமை.
- 1846 முடிக்குரிய காணிச்சட்டத்தினால் (பெருந்தோட்டங்களுக்கு சார்பாக அமைந்த அதே நேரம்) உள்நாட்டு மக்கள் தமது நிலத்தினை இழந்தமை.
- உள்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட புதியவரிகள்: (உதாரணமாக: நாய்வரி, பாதைவரி, கடைவரி, படகுவரி, மனிதவரி
போன்றன) இந்த வரிகள் மக்களுக்கு சுமையாக இருந்தமை.
- தாழ்நில சிங்களவர் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தமை
- பௌத்தமதம் புறக்கணிக்கப்பட்டமை (உதாரணமாக: தலதா மாளிகைக்கு வழங்கப்பட்ட நன்கொடை நிறுத்தப்பட்டது)
கலகத்தின் போக்கு
- இது மாத்தளை, தம்புள்ளையில் பரந்த அளவிலும், கொழும்பில் சிறிய அளவிலும் நடைபெற்றது
தலைமை
கலகத்துக்கு கொங்கல கொடபண்டா, வீரபுரன் அப்பு, குபாபொல தேரர்[1] ஆகியோர் தலைமை தாங்கினர்.
அடக்கப்பட்ட முறை
- போராட்டம் முறையாக ஒழுங்கு படுத்தப்படாமை
- மலைநாட்டுப்பிரதானிகளின் ஆதரவு கிடைக்காமை
- பிரித்தானிய தேசாதிபதி டொரிங்டன் அக்கலகத்தை அரசாங்கத்துக்கு எதிரான கலகம் எனக் கருதியமையால் கொடூரமான முறையில் நடந்து கொண்டார்.
- தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து கலகம் அடக்கப்பட்டது.
மேற்சான்றுகள்
உசாத்துணை
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.