![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/Chile.estrechodemagallanes.png/640px-Chile.estrechodemagallanes.png&w=640&q=50)
மகெல்லன் நீரிணை
From Wikipedia, the free encyclopedia
மகெல்லன் நீரிணை என்பது தென் அமெரிக்காவின் சிலி பெருநிலப்பரப்புக்குத் தெற்கில் அமைந்துள்ள நீரிணையாகும். பசுபிக் பெருங்கடலுக்கும் அத்திலாந்திக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள முக்கியமான இயற்கை நீரிணை இதுவாகும். இதன் ஆகக் குறைந்த அகலம் 4 கி.மீ ஆகும். இந்தக் குறுகிய அகலம் மற்றும் ஆபத்தான காலநிலை காரணமாக பயணிப்பதற்குச் சிக்கலான நீரிணையாக உள்ளது. போர்த்துக்கேய நடுகாண் பயணியான பேர்டினன் மகெல்லன் 1520 இல் இந்நீரிணையில் பயணித்த முதல் ஐரோப்பியரானார். 1914 இல் பனாமாக் கால்வாய் வெட்டப்படும்வரை பசுபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையிலானபிரதான பாதையாக இந்நீரிணையே இருந்தது.
மகெல்லன் நீரிணை | |
---|---|
![]() தென் அமெரிக்காவில் மகெல்லன் நீரிணையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 53°28′S 70°47′W |
வகை | நீரிணை |
வடிநில நாடுகள் | சிலி, அர்கெந்தீனா |
அதிகபட்ச நீளம் | 570 கி.மீ |
குறைந்தபட்ச அகலம் | 2 கி.மீ |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/StraitOfMagellan.jpg/640px-StraitOfMagellan.jpg)
இந்த நீரிணையின் இயற்பெயர் எஸ்ட்ரெச்சோ டி டோடோஸ் லாஸ் சாண்டோஸ் ( புனிதர்கள் அனைவரதும் நீரிணை) என்பதாகும். எசுப்பானிய மன்னர் சார்லஸ் V நாடுகாண் பயணியான பெர்டினண்ட் மகெல்லனினது ஞாபகார்த்தமாக மாகெல்லன் நீரிணை என்று பெயரிட்டார்.[1]