துன் அலி
மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா / From Wikipedia, the free encyclopedia
பெண்டகாரா துன் அலி அல்லது பெண்டகாரா சிறீ நரா திரஜா துன் அலி (ஆங்கிலம்: Bendahara Tun Ali; மலாய் மொழி: Bendahara Sri Nara Diraja Tun Ali; ) என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா ஆவார். மலாக்கா சுல்தானகத்தில் பெண்டகாரா (Bendahara) எனும் பதவி ஒரு பிரதமருக்கு உரிய பதவியாகும்.
விரைவான உண்மைகள் துன் அலிTun Ali, மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா (தலைவர்) ...
துன் அலி Tun Ali | |
---|---|
மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பெண்டகாரா (தலைவர்) | |
பதவியில் 1445–1456 | |
மூடு
இவர் மலாக்காவின் இசுலாமியத் தமிழ்த் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவர் பதவிக்கு வரும் போது சிறீ பரமேசுவர தேவா சா (Raja Sri Parameswara Dewa Shah) என்னும் இந்து அரசர் மலாக்கா சுல்தானகத்தின் அரியணையில் இருந்தார்.
பரமேசுவர தேவா சா என்பவர் மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது சுல்தான் ஆகும். இவரின் அசல் பெயர் அபு சாயிட் சா (Abu Syahid Shah) எனும் ராஜா இப்ராகிம் (Raja Ibrahim). இவர் இந்து மதத்தைப் பின்பற்றி வந்தார்.