![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/84/Wife_of_Tumanba_Khan.jpg/640px-Wife_of_Tumanba_Khan.jpg&w=640&q=50)
போர்ட்டே
செங்கிஸ்கானின் முதல் மனைவி / From Wikipedia, the free encyclopedia
போர்ட்டே உசின் கதுன் (சிரில்லிக்: Бөртэ үжин; 1161–1230) என்பவர் பிற்காலத்தில் செங்கிஸ் கானாகியத் தெமுசினின் மனைவி ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பேரரசியாக இருந்தார். இவரது இளமைக் காலம் பற்றி அதிகம் தெரியவில்லை. இவர் தெமுசினைத் தன் 17ஆம் அகவையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மெர்கிடு பழங்குடியினரால் கடத்தப்பட்டார். இவரை மீட்கத் தெமுசின் தைரியமாக முயன்றதே, அவரது உலகை வெல்லும் முயற்சியின் ஆரம்பமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஐந்து மகள்கள் பிறந்தனர்.
விரைவான உண்மைகள் போர்ட்டே கதுன், Tenure ...
போர்ட்டே கதுன் | |
---|---|
![]() போர்ட்டேயின் ஒரு முகலாய ஓவியம். | |
மங்கோலியப் பேரரசு மற்றும் கமக் மங்கோலின் கதுன் | |
Tenure | 1189–1230 |
பின்னையவர் | மோக் |
பிறப்பு | 1161 கென்டீ, மங்கோலியா |
இறப்பு | 1230 (அகவை 68–69) அவர்கா, மங்கோலியா |
புதைத்த இடம் | |
துணைவர் | செங்கிஸ் கான் |
குழந்தைகளின் பெயர்கள் | சூச்சி செச்செயிகென் |
மரபு | கொங்கிராடு |
தந்தை | தாய் செயிச்சென் |
தாய் | தசோதன் |
மதம் | தெங்கிரி மதம் |
மூடு