பேரண்டத்தில் புவியின் அமைவிடம்
பேரண்டத்தில் புவியின் அமைவிடம் குறித்த சிறு கட்டுரை / From Wikipedia, the free encyclopedia
பேரண்டத்தில் புவியின் அமைவிடம் (Earth's location in the universe) குறித்து 400 ஆண்டுகளாகவே ஆராயப்பட்டு வருகின்றது. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் இவ்வாராய்ச்சி எழுச்சி பெற்றதென கொள்ளலாம். முதலில் மானிடர்கள் புவியை மையமாக வைத்தே அண்டம் அமைந்திருந்ததெனக் கருதினர். 17ஆம் நூற்றாண்டில் சூரியனே மையமென்ற கொள்கை வலுப்பெற்ற பிறகு புவி இவ்வண்டத்தில் மிகக்குறுகிய இடத்தையே ஆக்கிரமித்திருப்பது அறியப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நெபுலாக்கள் நன்கு ஆராயப்பட்ட பிறகு இவ்விரிவடையும் அண்டத்தில் புவி அமைந்துள்ள பால் வழி போல் 100 கோடிக்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது அறியப்பட்டது. மானிடரால் காட்சிக்குட்படுகிற பேரண்டத்தின் அளவு விரிவடைய விரிவடைய விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் என இவ்வண்டத்திலுள்ள தொகுப்புகள் வகைப்படுத்தப்பட்டன. அதன்படி ஒரு கோளையோ அல்லது விண்மீனின் அமைவிடத்தையோ கூற வானியலார் விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் போன்ற வரையறைகளை உருவாக்கினர்.