பாலகிருஷ்ணன் மாதவன் (Palakrishnan Madhavan, 1 சனவரி 1928 - 16 திசம்பர் 2003) தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] மாதவன் 49 திரைப்படங்களை இயக்கியும், "அருண் பிரசாத் மூவீஸ்" என்ற பெயரில் 39 திரைப்படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
விரைவான உண்மைகள் பி. மாதவன், பிறப்பு ...
பி. மாதவன் |
---|
பிறப்பு | பாலகிருஷ்ணன் மாதவன் (1928-01-01)1 சனவரி 1928 வாலாஜாபேட்டை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
---|
இறப்பு | திசம்பர் 16, 2003(2003-12-16) (அகவை 75) சென்னை |
---|
கல்வி | பி.ஏ |
---|
பணி | இயக்குநர், தயாரிப்பாளர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1963–1992 |
---|
பெற்றோர் | தந்தை : பாலகிருஷ்ணன் தாயார் : ராதாமணி |
---|
மூடு
- பி. மாதவன் அப்போதே பி.ஏ பட்டம் பெற்று படித்து முடித்துவுடனே தான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தனது எதிர்காலத்தை தீர்மானித்தார்.
- அதற்கு காரணம் மாதவனின் முகம் சிறுவயதிலே அழகாக இருந்ததால் தனது தாயார் ராதாமணி இடம் தமிழ் வசனம் பேசி நடித்து காட்டியவுடன் அவர் உனக்கு பெரிய எதிர்காலம் தமிழ்த் திரையுலகில் உண்டு என்று கூற தனது சொந்த ஊரான வாலாஜாபேட்டையில் இருந்து சென்னைக்கு இரயில் ஏறினார்.
- ஆனால் எதிர்காலம் திரையுலகில் அவரை ஒரு மாபெரும் இயக்குனராக மாற்றியது.
- ஆரம்ப காலத்தில் டி. ஆர். ரகுநாத் மற்றும் ஶ்ரீதர் ஆகிய இயக்குனர்களுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
- இவர் 1963 ஆம் ஆண்டு ஏ.எல்.எஸ் பிக்சர்ஸ் தயாரித்த மணியோசை இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நல்ல கதைகளம் இருந்தும் இவரது முதல் படமே தோல்வி அடைந்தது.
- அதன் பின் சிவாஜி கணேசன் உடன் இணைந்து அன்னை இல்லம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
- முதல் திரைப்படமே தோல்வியடைந்ததால் இப்படத்தை சிவாஜி கணேசனை வைத்து மிகவும் கவனத்துடன் இயக்கி வெற்றி திரைப்படமாக்கினார்.
- இதனால் மேலும் சிவாஜி கணேசனின் நட்பினால் அவரை வைத்து 15 படங்கள் இயக்கியுள்ளார்.
- எம். ஜி. ஆரின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிறுவிய ஆர். எம். வீரப்பன் உதவியால் அந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமான தெய்வத்தாய் படத்தை எம். ஜி. ஆரை வைத்து இயக்குகின்ற வாய்ப்பை பெற்றார். மேலும் எம்ஜிஆரை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படமாக அமைந்தது.
- எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், விஜயகுமார், ரஜினிகாந்த், விஜயகாந்த் மற்றும் தேவிகா, விஜயகுமாரி, சௌகார் ஜானகி, கே. ஆர். விஜயா, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, சாரதா, மஞ்சுளா, உஷா நந்தினி, ஸ்ரீபிரியா ஆகிய நடிகைகளை வைத்து பல படங்கள் இயக்கினார்.
- இவரது இயக்கத்தில் வெளிவந்த புகழ்பெற்ற திரைப்படங்களில் சில மணியோசை, அன்னை இல்லம், தெய்வத்தாய், எங்க ஊர் ராஜா, குழந்தைக்காக, கண்ணே பாப்பா, வியட்நாம் வீடு, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, சபதம், தேனும் பாலும், ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம், மனிதனும் தெய்வமாகலாம், பாட்டும் பரதமும், சங்கர் சலீம் சைமன், ஏணிப்படிகள், ஹிட்லர் உமாநாத், அக்னி பார்வை. ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
- இதில் குழந்தைக்காக, ராமன் எத்தனை ராமனடி, நிலவே நீ சாட்சி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய திரைபடங்களுக்கு தேசிய திரைப்பட விருது பெற்றார்.
- இவருடன் கதாசிரியர்களான கே. பாலசந்தர், வியட்நாம் வீடு சுந்தரம், பாலமுருகன் ஆகியோர் இவருடைய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள்.
- பின்பு இவர் சொந்தமாக அருண்பிரசாத் மூவிஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதிலும் தமிழ், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கினார்.
- எம். ஜி. ஆர் திரைப்பட நகரின் முதலாவது தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.
மாதவன் 2003 திசம்பர் 16 அன்று தனது 75-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]