பவநகர்
From Wikipedia, the free encyclopedia
பாவ்நகர் (குசராத்தி: ભાવનગર}}, இந்தி: भावनगर) இந்திய மாநிலமான குசராத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். கிபி 1723ஆம் ஆண்டில் மன்னர் பாவ்சிங்ஜி கோஹில்லால்(1703-64 ) கட்டப்பட்ட இந்த நகரத்திற்கு அவரது பெயரே இடப்பட்டுள்ளது. இது பாவ்நகர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது.
பாவ்நகர் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): G | |
நாடு | ![]() |
மாநிலம் | குஜராத் |
மண்டலம் | சௌராட்டிர தீபகற்பம் |
மாவட்டம் | பவநகர் மாவட்டம் |
நிறுவிய ஆண்டு | 1723 |
தோற்றுவித்தவர் | பாவ்சிங்ஜி (கௌசிக்சிங்ஜி கோகில்) |
அரசு | |
• நிர்வாகம் | பவநகர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 138 km2 (53 sq mi) |
ஏற்றம் | 24 m (79 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 6,50,000 |
• அடர்த்தி | 4,700/km2 (12,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகல் | குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சலக சுட்டு எண் | 364 001 & 364 002 |
தொலைபேசி குறியிடு எண் | (91)278 |
வாகனப் பதிவு | GJ•04 |
1948ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த முதல் இராச்சியமாக பாவ்நகர் இராச்சியம் இருந்தது.
குஜராத் மாநிலத் தலைநகர் காந்திநகரிலிருந்து 228 கிமீ தொலைவில் காம்பத் வளைகுடாவின் மேற்கே அமைந்துள்ளது.
பவநகரிலிருந்து தென்மேற்கில் 50 கி. மீ., தொலைவில் அமைந்துள்ள பாலிதானா நகரம் சமணர்களுக்கு புனித தலம் ஆகும்.
பவநகர் மாவட்டத்தின் தலைமையிடமாக பாவ்நகர் உள்ளது. குசராத்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் சௌராட்டிரத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. பாவ்நகர் சௌராட்டிரத்தின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.