பழவேற்காடு ஏரி
From Wikipedia, the free encyclopedia
பழவேற்காடு ஏரி (ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி, Pulicat Lake) இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. இது சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. வடக்கே ஸ்வரணமுகி ஆறும் வட மேற்கே காலாங்கி ஆறும் தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
பழவேற்காடு ஏரி | |
---|---|
அமைவிடம் | சோழமண்டல கடற்கரை |
ஆள்கூறுகள் | 13.56590°N 80.17478°E / 13.56590; 80.17478 |
வகை | உவர்நீர் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 60 கி.மீ |
அதிகபட்ச அகலம் | 17.5 கி.மீ |
மேற்பரப்பளவு | 250 கிமீ² முதல் 460 கிமீ² வரை |
பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது. இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.
பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இவ்வேரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் காரணிகளாக உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ2 ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ2 ஆகவும் வேறுபடும்.