பலுசிஸ்தான் விடுதலைப்படை
பாக்கித்தானில் செயல்படும் இராணுவக் குழு / From Wikipedia, the free encyclopedia
பலுசிஸ்தான் விடுதலைப்படை (Balochistan Liberation Army) என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள பலூச் இனவாத போராளி பிரிவினைவாத அமைப்பாகும்.[3][4] 2000 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தின் போது பாக்கிஸ்தானிய அதிகாரிகள் மீதான தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்குப் பிறகே இக்குழுவைப் பற்றி தெரிய வந்தது. இதுவே இக்குழுவினரின் பதிவு பெற்ற முதல் தாக்குதல் ஆகும்.[3][5] இந்த அமைப்பு பாக்கித்தான்,[6] ஐக்கிய இராச்சியம்,[7] அமெரிக்கா[8][9] போன்ற நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் விடுதலைப்படை | |
---|---|
இயங்கிய காலம் | |
கொள்கை | பலூச் தேசியம் |
தலைவர்கள் | ஹைர்பையர் மார்ரி [1] |
செயற்பாட்டுப் பகுதி |
பலூசிஸ்தான், பாகிஸ்தான் ஆப்கானித்தான்[2] |
எதிராளிகள் | பாக்கித்தான் ஈரான் |
பலுசிஸ்தான் விடுதலைப்படை பாக்கிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் செயல்படுகிறது, அங்கு பாக்கித்தான் ஆயுதப்படைகள், பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறது.[10][11] பலுசிஸ்தானை பாக்கித்தானில் இருந்து பிரித்து தனி நாடாக்குவதே இதன் நோக்கம் ஆகும். இத்தீவிரவாதக் குழுவின் தற்போதைய தலைவர் ஹைர்பையர் மார்ரி ஆவார்.[12][13]