From Wikipedia, the free encyclopedia
அனைத்துலக நீதிமன்றம் அல்லது தேசம்கடந்த நீதிமன்றம் (International Court of Justice) என்பது, ஐ.நா சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, ஹேக் அனைத்துலகச் சட்ட அக்காடமி என்னும் நிறுவனத்துடன் அமைதி மாளிகை (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல நீதிபதிகள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
அமைதி மாளிகை, அனைத்துலக நீதிமன்றத்தின் தலைமையகம். | |
நிறுவப்பட்டது | 1945 |
---|---|
வகை | முதன்மை உறுப்பு |
சட்டப்படி நிலை | செயற்படுகிறது |
அலுவல் மொழிகள் | ஆங்கிலம், பிரெஞ்சு |
இணையதளம் | www.icj-cij.org |
ஐக்கிய நாடுகள் அவையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த நிரந்தர அனைத்துலக நீதிமன்றம் (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல.[1]
இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந்நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அவைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.
இதில் பதினைந்து நீதிபதிகள் பதவி வகிப்பர். ஒவ்வொருவருக்குமான காலம் ஒன்பது ஆண்டுகள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழுவும், பாதுகாப்புக் குழுவும் இணைந்து இவர்களை தேர்ந்தெடுக்கின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐந்து நீதிபதிகள் என்ற அளவில் தேர்தல் நடைபெறும். பதவியில் இருக்கும்போதே ஒருவர் இறப்பார் எனில், அவருக்கு மாற்றாக வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒரே நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை தேர்வு செய்யக் கூடாது. இந்த அமைப்பு தொடங்கியதில் இருந்து இன்றுவரை, பாதுகாப்பு குழுவில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளை நியமித்துக் கொண்டிருக்கின்றன. சீனா மட்டும் சில ஆண்டுகாலத்திற்கு தன் நாட்டு நீதிபதியை இந்த குழுவில் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்சு, ரசியா உள்ளிட்ட நாடுகள் அனைத்து தடவைகளிலும், தங்கள் நாட்டு நீதிபதிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நியமித்திருந்தன. புவிப்பிரிவு அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் இருக்கும். என்றாலும், சட்டப்பூர்வமாக இதற்கு விதி எதுவுமில்லை. இந்த அமைப்பின் சட்டத்தின்படி, “நாட்டின் அடிப்படையில் அல்லாமல், உயர்ந்த குணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.” இதில் பதவியில் உள்ல நீதிபதிகள் பிற இடங்களில் பணியாற்றக் கூடாது என்பது விதி. நீதிபதி ஒருவரை நீக்க நீதிமன்றத்தின் பெரும்பான்மையினரது வாக்குகள் தேவை. வழக்கின் நிலையைப் பொருத்து, தற்காலிகமாக நீதிபதிகள் இணைந்து கொள்ளலாம். அதிகபட்சமாக, ஒரு வழக்கிற்கு பதினேழு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியும். [2] நீதிபதிகளின் தீர்ப்புகள் ஒரே மாதிரியோ, வேறுபட்டோ இருக்கலாம். வேறுபட்டு இருந்தால், அதிகம் பேரின் கருத்துக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். சம அளவில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால், தலைவரின் முடிவே இறுதியானது.
ஐநா சபையின் சட்டத்தின் 93வது பட்டயத்தின்படி, அதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்..[3] ஐநா சபையில் இல்லாத நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம். சுவிட்சர்லாந்தும், நவுருவும் ஐநா சபையில் இல்லாத போதே இதன் உறுப்பினராகச் சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். உறுப்பினர் இந்த தீர்வை ஏற்காத நிலையில், இது பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு எதிராகவோ, அவற்றின் நட்பு நாடுகளுக்கு எதிராகவோ நீதிபதி தீர்ப்பளித்தால், அந்த தீர்ப்பை தடுப்பு வாக்கின் மூலம் தடை செய்ய முடியும். சில வழக்குகளில் இது நிகழ்ந்துள்ளது. அனைத்துலக நீதிமன்றத்திற்கும், பாதுகாப்புக் குழுவிற்கும் எதிரெதிர் கருத்துகள் இருந்தால், இறுதி முடிவு பாதுகாப்புக் குழுவிற்கு சாதகமாகவே இருக்கும்.
அனைத்துலக நீதிமன்றம், புதிய சட்டங்களை எழுதி, பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிமை பெற்றுள்ளது. வழக்குகள் நிலையான வடிவத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு வரும். அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கை சமர்ப்பிக்க விரும்பாத வாதி, தன் கருத்தை பதிவு செய்யலாம். எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பின், பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
வழக்குகளின் போது, தொடர்பில்லாத ஒரு நாட்டின் நலன் பாதிக்கப்படும் எனில், அந்த நாடு வழக்கில் தன் வாதத்தை முன்னிறுத்தலாம். மூன்றாம் நபரை (நாட்டை) குறுக்கிட அனுமதிப்பது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. உறுப்பினர் நாடுகள் மட்டுமே வழக்கு தொடர் முடியும். தேவைப்படும் பட்சத்தில், பிற பன்னாட்டு நிறுவனங்களும், ஐநா உறுப்பு அமைப்புகளும் தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்கப்படுவர். ஐநா சபையின் உறுப்பினர் நாடுகளிடம் அறிவுரைகள் கேட்கப்படலாம். சிக்கலான வழக்குகளின்போதே இத்தகைய கருத்துகேட்புகள் இருக்கும். கருத்துகளும் எதிரெதிராக இருப்பதும் உண்டு. இவர்கள் தங்கள் கருத்தை வாய்மூலமாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ சமர்ப்பிக்கலாம்.
ஐ.நா. சாசனத்தின் 93 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அனைத்து ஐ.நா. உறுப்பினர்களும் நீதிமன்ற சட்ட "(கட்சி (சட்டம்))" விதிகளுக்கு கட்டுப்பட்டவர்களே என்கிறது.[4] உறுப்புரை 93 (2) நடைமுறையின் கீழ் நீதிமன்றத்தின் விதிக்கு ஐ.நா. உதாரணமாக, ஐ.நா. உறுப்பு நாடாக மாறும் முன்னர் சுவிட்சர்லாந்த் இந்த முறையை 1948 இல் ஒரு கட்சியாக மாற்றியது. 1988 ல் நவூரு ஒரு கட்சியாக ஆனது.[5] ஒரு மாநிலம் நீதிமன்ற சட்ட விதிகளின்படி ஒரு கட்சியாக இருந்தால்,நீதிமன்றத்திற்கு முன்னர் வழக்குகளில் பங்கேற்க உரிமை உண்டு. எனினும், நிரந்தர விதிகளுக்குள் ஒரு கட்சி இருப்பது தானாக அந்த கட்சிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களால் நீதிமன்ற அதிகார வரம்பை கொடுக்க முடியாது. சட்ட அதிகார வரம்பு பிரச்சினை இரண்டு வகையான ICJ வழக்குகளில் இவ்வாறு கருதப்படுகிறது: ஒன்று விவாதங்கள் மற்றொன்று ஆலோசனை கருத்துகளாகும்.
சர்ச்சைக்குரிய சந்தர்ப்பங்களில் (விவாதத்தைத் தீர்ப்பதற்காக எதிர்க்கும் வழக்குகள்), ICJ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஒப்புக் கொள்ளும் மாநிலங்களுக்கிடையில் ஒரு தீர்ப்பை உருவாக்குகிறது.சந்தேகத்திற்குரிய விஷயங்களில் இறையாண்மை மாநிலங்கள் மட்டுமே கட்சிகளாக இருக்கலாம். நீதிமன்றம் பொதுமக்களிடமிருந்து தகவலை பெறலாம் என்றாலும் தனிநபர்கள், நிறுவனங்கள், மத்திய அரசு, என்.ஜி.ஓ.க்கள், ஐ.நா உறுப்புகள் மற்றும் சுயநிர்ணய உரிமை குழுக்கள் நேரடியாக பங்கு பெறுவதிலிருந்து விலக்கப்படுகின்ற அமைப்புகளாகும்.ஒரு மாநில மற்றொரு மாநிலத்திற்கு எதிராக வழக்கு கொண்டுவந்தால் அந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி உட்படுத்தப்பட்டு இருந்து அல்லாத மாநிலத்தின் நலன்களில் விலக்கு இல்லை. உதாரணமாக, ஒரு "இராஜதந்திர பாதுகாப்பு" வழக்குகளில் ஒரு அரசு, ஒரு நாட்டின் சார்பில் அல்லது ஒரு நிறுவனம் சார்பாக ஒரு வழக்கை கொண்டு வரலாம்.[6]
நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வழக்குகளில் பெரும்பாலும் நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான கேள்வி.ICJ க்கு சட்ட அதிகார எல்லை ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே உள்ளது என்கிறது முக்கியக் கோட்பாடு. பிரிவு 36 அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட நான்கு ஆதாரங்களைக் பின்வருமாறு கோடிட்டுக் காட்டுகிறது:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.