பனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் 1990 வரை அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெற்ற முறுகலைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது இராணுவம், தொழினுட்பம், மற்றும் விண்வெளி திட்டங்களை வளர்ச்சி செய்துள்ளன. வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து இரண்டு நாடுகளும் உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகள் பொதுவுடமையை பயன்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசு பொதுவுடமையின் விரிவை தடை செய்ய பார்த்தது. இதனால் கொரியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்காவுடன் இணைந்த படையினர்களும் சோவியத் ஒன்றியத்தை இணைந்த படையினர்களும் போர்களில் ஈடுபட்டுள்ளன.
1980களின் இறுதியில் பனிப்போரின் முடிவு வந்தது. அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் ஒன்றியத்து எதிரான கொள்கைகளின் வலிமையை மேம்படுத்தியுள்ளார். சோவியத் தலைவர் மிகேல் கோர்பசோவ் சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடமை கொள்கைகளை மாற்றினார். 1991இல் சோவியத் ஒன்றியம் அழிக்கப்பட்டு பனிப்போர் முடிவடைந்தது.
சொல்லிலக்கணம்
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வெல், பிரித்தானிய பத்திரிகையான ட்ரிப்யூனில் 19 அக்டோபர் 1945 இல் வெளியான "(You and the Atomic Bomb) நீ மற்றும் அணுகுண்டு" என்ற கட்டுரையில் பொதுக் குறிப்பாக, பனிப்போர் என்ற சொல்லை பயன்படுத்தினார். அணுவாயுதப் போர் அச்சுறுத்தலின் நிழலில் வாழும் ஒரு உலகத்தை நினைத்து, ஒரு துருவமுனை உலகின் ஜேம்ஸ் பர்ன்ஹாமின் கணிப்புகளைப் ஒப்பிட்டு ஓர்வெல் இவ்வாறு எழுதினார்:
உலகம் முழுவதையும் பார்க்கும்பொழுது, பல தசாப்தங்களாக நகர்வது அராஜகத்திற்கு எதிரானது அல்ல, ஆனால் அடிமைத்தனத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கம் கொண்டது .... ஜேம்ஸ் பர்ன்ஹாமின் கோட்பாடு மிகவும் விவாதிக்கப்பட்டது, ஆனால் ஒரு சிலர் தான் அதன் கருத்தியல் தாக்கங்களைக் கொண்டுள்ளனர்- அதாவது உலகின் பார்வையில், நம்பிக்கைகள், மற்றும் அநேக நிலப்பகுதியில் நிலவுகின்ற சமூக அமைப்பானது அதன் அண்டை நாடுகளுடன் பனிப்போர் என்ற நிரந்தர நிலைமையில் உள்ளது.[1]
மார்ச் 10, 1946 அன்று பத்திரிகையில், ஓர்வெல் எழுதியது: "கடந்த டிசம்பரில் மாஸ்கோ மாநாட்டிற்குப் பின்னர், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரித்தானிய பேரரசு மீது ஒரு "பனிப்போர்" செய்யத் தொடங்கியள்ளது." [2]
பின்னணிச்சூழல்
பனிப்போர் தொடக்க புள்ளியைப் பற்றி வரலாற்று அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து உடனடியாக பனிப்போர் தொடங்கியதாக அதன் தோற்றத்தை கண்டுபிடித்துள்ளனர், மற்றவர்கள் 1917 இல் போல்ஷெவிக் அதிகாரத்திற்கு வந்தபோது ரஷ்ய குடியரசில் அக்டோபர் புரட்சியில் தொடங்கியது என்று வாதிடுகின்றனர். சோவியத் யூனியன் ஒரு "விரோதமான முதலாளித்துவ சுற்றுப்பாதையில்" சூழப்பட்டிருப்பதாக விளாடிமிர் லெனின் குறிப்பிட்டார். சோவியத் ஒன்றியத்தின் எதிரிகளை பிரித்து வைப்பதற்கு ஒரு ஆயுதமாகவும் சர்வதேச கம்யூனிசம் உருவாக்கும் இராஜதந்திரம்மாக பனிப்போரை கருதினார். இது வெளிநாடுகளில் புரட்சிகர எழுச்சிகளை அழைத்தது.[3] அவருடைய வாரிசான ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தை ஒரு "சோசலிச தீவு" என்று கருதியதுடன், "தற்போதைய முதலாளித்துவ அமைப்பு ஒரு சோசலிச சுற்றுச்சூழலால் மாற்றியமைக்கப்பட வேண்டும்" என்பதைக் குறிப்பிட்டுக் கூறினார்." [4]
இரண்டாம் உலகப் போருக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை நிரூபித்தன மற்றும் மேற்கத்திய சக்திகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே சந்தேகமும், இது தவிர முதலாளித்துவத்திற்கு எதிராக கம்யூனிசத்தால் முன்வைக்கப்படும் பொது தத்துவ சவால்களும் அடங்கியுள்ளது.[5] ரஷ்ய உள்நாட்டுப் போரில் போல்ஷிவிக்குக்கு எதிரான எதிர்ப்பில் மேற்கு நாடுகளின் (வெள்ளை இயக்கம்) ஆதரவு இருந்தது,[6] 1926 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியதில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு சோவியத் நிதி கொடுத்ததால், பிரித்தானியா மற்றும் சோவியத் ஒன்றியத்துடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.[7] ஸ்டாலிலின் 1927 முதலாளித்துவ நாடுகளுடன் சமாதான சகவாழ்வு பற்றிய அறிவிப்பு "கடந்த காலத்தை விட்டு விலகி," [8] திட்டமிட்ட பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் 1928 ஆம் ஆண்டில் நடந்த ஷக்தி நிகழ்ச்சி விசாரணை,[9] 1933 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரிக்க மறுத்தது [10] மற்றும் பிரித்தானிய, பிரெஞ்சு, ஜப்பானிய மற்றும் நாஜி ஜேர்மன் உளவுத்துறையின் குற்றச்சாட்டுக்களுடன் பெரிய களையெடுப்பு மாஸ்கோ விசாரணைகள் நடைபெற்றது.[11] இருப்பினும், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகப் போர்களுக்கு இடையேயான இடைகால காலத்தில் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன.[12]
இரண்டாம் உலகப் போரின் முடிவு (1945-47)
போருக்குப் பிந்தைய ஐரோப்பா தொடர்பாக போர்க்கால மாநாடுகள்
போரைப் பின்தொடர்ந்து, ஐரோப்பிய வரைபடம் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படி எல்லைகள் வரையறுக்கப்படப் போகிறது என்பதில் கூட்டணி நாடுகளிடம் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. வெவ்வேறு நாடுகளும் போருக்குப் பிந்தைய பாதுகாப்பை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் வித்தியாசமான யோசனைகளைக் கொண்டிருந்தன. மேற்கத்திய நாடுகள் ஜனநாயக அரசாங்கங்கள் பரந்த அளவில் நிறுவப்படவேண்டும் என்றும், அதன் மூலமாக, சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் நாடுகள் தமக்கிடையேயான வேறுபாடுகளைச் சமாதானமாக முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்பின.
சோவியத் ஒன்றியம் தனது எல்லைக்கு உட்பட்ட நாடுகளின் உள் விவகாரங்களை ஆதிக்கம் செலுத்த முற்பட்டது. போரின் போது, பல்வேறு நாடுகளிலிருந்து கம்யூனிஸ்டுகளுக்கு ஸ்டாலின் சிறப்பு பயிற்சி மையங்களை உருவாக்கியது, இதனால் சிகப்புப்படை சட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்போது மாஸ்கோவிற்கு இரகசிய பொலிஸ் படைகளை அமைக்க முடியும். சோவியத் முகவர்கள் ஊடகங்கள், குறிப்பாக ரேடியோவைக் கட்டுப்பாட்டில் வைத்தனர்; இளைஞர்கள் குழுக்களிடமிருந்து பள்ளிகள், தேவாலயங்கள் மற்றும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வரை அனைத்து சுயாதீன குடிமை நிறுவனங்களையும் உடனடியாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஸ்டாலின் பிரிட்டனுக்கும் அமெரிக்காவுடனும் தொடர்ந்து சமாதானத்தைக் கோரினார், உள்நாட்டின் புனரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு உதவும் என்று நம்பினார்.
போட்ஸ்டாம் மாநாடு மற்றும் ஜப்பான் சரணடைவு
ஜெர்மனி சரணடைந்த பிற்பகுதியில் சூலை மாதத்தில் துவங்கிய போட்ஸ்டாம் மாநாட்டில், ஜெர்மனி மற்றும் பிற மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் எதிர்கால வளர்ச்சி குறித்து தீவிர வேறுபாடுகள் வெளிப்பட்டன. மேலும், பங்கேற்பாளர்களின் பெருகிய மனநிறைவு மற்றும் போர்வீரர் மொழி ஒருவருக்கொருவர் விரோத நோக்கங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும், அவற்றின் நிலைகளை அடைக்கவும் உதவியது. இந்த மாநாட்டில் ட்ரமன், ஸ்டாலினுக்கு எதிராக அமெரிக்கா ஒரு சக்தி வாய்ந்த புதிய ஆயுதத்தை வைத்திருப்பதாக அறிவித்தார்.
கிழக்கு மாகாணம் தொடக்கம்
இரண்டாம் உலகப் போரின் ஆரம்ப கட்டங்களில், சோவியத் ஒன்றியம் ஆக்கிரமிப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்துக்கான அடித்தளத்தை அமைத்தது. பின்னர் மோலிடோவ்-ரிபண்ட்ராப் ஒப்பந்தத்தில் நாஜி ஜெர்மனியின் உடன்படிக்கையின் படி பல நாடுகளை சோவியத் சோசலிச குடியரசுகளாக இணைத்து. இதில் கிழக்கு போலந்து (இரண்டு வெவ்வேறு SSR களாக இணைக்கப்பட்டது),[13] லாட்வியா (இது லாட்வியா SSR ஆனது),[14][15] எஸ்தோனியா (எஸ்டோனியா எஸ்எஸ்ஆர்),[14][15] லித்துவேனியா (இது லிதுவேனியன் SSR ஆனது),[14][15] கிழக்கு பின்லாந்து (இது கரேலோ-பின்னிஷ் SSR ஆனது) மற்றும் கிழக்கு ருமேனியா (இது மால்தவிய சோவியத் ஒன்றியமாக மாறியது).[16][17]
நாஜிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பிரதேசங்கள், சோவியத் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை செயற்கை மாநிலங்களாக மாற்றி கிழக்கு மாகாணதின் ஒரு பகுதியாக,[18] பின்வரும் பகுதிகளை இனைத்தது:
- ஜெர்மன் ஜனநாயக குடியரசு[19]
- போலந்து மக்கள் குடியரசு
- பல்காரியா மக்கள் குடியரசு
- ஹங்கேரி மக்கள் குடியரசு[20]
- செக்கோஸ்லோவாக்கியா சோசலிச குடியரசு[21]
- ருமானியா மக்கள் குடியரசு
- அல்பேனியா மக்கள் குடியரசு[22]
சோவியத் ஒன்றியத்தின் ஆளுமைகள் சோவியத் கட்டளை பொருளாதாரங்கள் கிழக்கு மாகாணத்தில் தோன்றியது, ஆனால் உண்மையான மற்றும் சாத்தியமான எதிர்ப்பை நசுக்குவதற்காக ஜோசப் ஸ்டாலின் மற்றும் சோவியத் இரகசிய போலீசாரால் பயன்படுத்தப்பட்ட கொடூரமான வழிமுறைகளையும் ஏற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாணத்தின் மீது ஸ்டாலின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் ஒரு பகுதியாக, லவ்ரண்டி பிரிய்யா தலைமையிலான உள் விவகாரங்களுக்கான மக்கள் கழகம் (NKVD) கம்யூனிச எதிர்ப்பை நசுக்க வேண்டுமென்ற மாகாணம் மீது சோவியத் பாணியிலான இரகசிய பொலிஸ் அமைப்புகள் நிறுவப்பட்டதை மேற்பார்வை செய்தனர். மாகாணம் சுதந்திரத்திற்காக சிறிய அளவில் போரட்டம் தோன்றினாலும், ஸ்டாலின்னின் பயன்படுத்திய உத்திகளை கையான்டு போராட்டத்தை அடக்கினர். மேலும் போராட்டகாரர்களுக்கு கொடிய சிறைதண்டனையும் சில வேலைகளில் மரண தண்டனையும் வழங்கி கட்டுபடுத்தினர்.
பிரித்தானிய பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், போர் முடிவில் ஐரோப்பாவில் சோவியத் படைகளை ஏராளமான அளவு இருந்ததால், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் நம்பமுடியாதவராக இருந்ததைக் கருத்தில் கொண்டு, மேற்கு ஐரோப்பாவுக்கு சோவியத் அச்சுறுத்தல் இருப்பதாக கருதினார்.[23]
மேற்கோள்கள்
மேலும் பார்க்க
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.