From Wikipedia, the free encyclopedia
பந்திப்பூர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandipur National Park) 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசியப் பூங்காவானது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி மைசூர் அரசரின் தனிப்பட்ட வேட்டைக் களமாக இருந்தது.[1] 1941 ஆம் ஆண்டிலேயே இப்பகுதி வேணுகோபால் வனவிலங்குப் பூங்கா என்ற பெயரால் அறியப்பட்டது. தமிழ்நாட்டின் முதுமலையும் கேரளாவின் வயநாடும் இதற்கு எல்லைகளாக உள்ளன.
பந்திப்பூர் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
பந்திப்பூர் தேசியப் பூங்காவிலுள்ள புலிகளுள் ஒன்று. | |
அமைவிடம் | மைசூர், கர்நாடகம், இந்தியா |
அருகாமை நகரம் | மைசூர் 80 கிலோமீட்டர்கள் (50 mi) |
நிறுவப்பட்டது | 1974 |
நிருவாக அமைப்பு | வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சு மற்றும் கர்நாடக வனத் துறை |
www |
இந்தத் தேசியப் பூங்காவானது பல்வேறு வகையான வன விலங்குகள் வாழும் இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களின் வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் மரணமடைகின்றன.[2] எனவே இங்கு வாகனங்கள் செல்வதற்குக் கட்டுப்பாடு உள்ளது.[3]
இந்தப் பூங்கா 874 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ளது. தக்காண பீடபூமியும் மேற்குத் தொடர்ச்சி மலை இணையும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 680 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாய் இப்பூங்காவானது பல்லுயிரிகளின் முக்கிய வாழ்விடமாய் உள்ளது.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக 15,450 ஹெக்டேர் காட்டுப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின. [4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.