![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Manangite.png/640px-Manangite.png&w=640&q=50)
பதநீர்
From Wikipedia, the free encyclopedia
பதநீர் என்பது தென்னை, பனை, கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் ஆகும். இது இனிப்புச் சுவையுடைய அல்ககோல் அற்ற பானமாகும். பதனீரிலிருந்து கள்ளு, கருப்பட்டி, வினாகிரி என்பன தயாரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல மதுவத்தினால் நொதித்தலடைந்து கள்ளாக மாறும். இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Manangite.png/320px-Manangite.png)