![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Thithi-Panchami.jpg/640px-Thithi-Panchami.jpg&w=640&q=50)
பஞ்சமி
From Wikipedia, the free encyclopedia
பஞ்சமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஐந்தாவது திதி பஞ்சமி ஆகும். பஞ்ச எனும் வடமொழிச் சொல் ஐந்து எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் ஐந்தாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் ஐந்தாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் ஐந்தாம் நாளுமாக இரண்டு முறை பஞ்சமித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் பஞ்சமியைச் சுக்கில பட்சப் பஞ்சமி என்றும், பூரணையை அடுத்த பஞ்சமியைக் கிருட்ண பட்சப் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Thithi-Panchami.jpg/640px-Thithi-Panchami.jpg)