பக்சி குலாம் மொகமது
From Wikipedia, the free encyclopedia
பக்சி குலாம் மொகமது (Bakshi Ghulam Mohamed, 1907-15 சூலை 1972) இந்தியாவின் வடமுனையில் உள்ள சம்மு காசுமீர மாநிலத்தின் தலைமை அமைச்சராக 11 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்த அரசியல்வாதி ஆவார். சேக் அப்துல்லா பதவி விலக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதால் பக்சி குலாம் மொகமது 1953 இல் மாநிலத் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.