![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/Parteiadler_Nationalsozialistische_Deutsche_Arbeiterpartei_%25281933%25E2%2580%25931945%2529.svg/langta-640px-Parteiadler_Nationalsozialistische_Deutsche_Arbeiterpartei_%25281933%25E2%2580%25931945%2529.svg.png&w=640&q=50)
நாட்சி கட்சி
From Wikipedia, the free encyclopedia
நாட்சிக் கட்சி அல்லது தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி (National Socialist German Workers Party, இடாய்ச்சு மொழி: Nationalsozialistische Deutsche Arbeiterpartei, NSDAP), 1920 முதல் 1945 வரையில் செருமனியின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியாகும்.
விரைவான உண்மைகள் தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி National Socialist German Workers' Party, சுருக்கக்குறி ...
தேசிய சோசலிச செருமானியத் தொழிலாளர் கட்சி National Socialist German Workers' Party | |
---|---|
Nationalsozialistische Deutsche Arbeiterpartei | |
![]() | |
சுருக்கக்குறி | NSDAP |
தலைவர் | ஆன்டன் டிரெக்சிலர் (24 பெப்ரவரி 1920 – 29 சூலை 1921)[1] |
பியூரர் | இட்லர் (29 சூலை 1921 – 30 ஏப்ரல் 1945) |
கட்சி அமைச்சர் | மார்ட்டின் போர்மன் (30 ஏப்ரல் 1945 – 2 மே 1945) |
குறிக்கோளுரை | Deutschland erwache! ("செருமனி, விழித்தெழு!") |
தொடக்கம் | 24 பெப்ரவரி 1920; 104 ஆண்டுகள் முன்னர் (1920-02-24) |
முன்னர் | செருமானியத் தொழிலாளர் கட்சி |
தலைமையகம் | மியூனிக், செருமனி[2] |
செய்தி ஏடு | தேசிய ஒப்சர்வர் |
மாணவர் அமைப்பு | தேசிய சோசலிச செருமானிய மாணவர் ஒன்றியம் |
இளைஞர் அமைப்பு | இட்லர் இளையோர் |
துணை இராணுவப் பிரிவுகள் | ஸ்ட்ரோமப்டேலுங், சுத்ஸ்டாப்பெல், மோட்டார் கார்ப்சு |
வெளிநாட்டுப் பிரிவு | NSDAP/AO |
உறுப்பினர் |
|
கொள்கை | நாட்சிசம் |
அரசியல் நிலைப்பாடு | தீவிர-வலதுசாரி[4][5] |
நிறங்கள் | |
பண் | "ஹார்ஸ்ட் வெசலின் பாடல்" |
கட்சிக்கொடி | |
![]() |
மூடு
நாட்சிக் கட்சி முதலாம் உலகப் போரின் முடிவில் தேசியவாதிகள் சிலரினால் வளர்த்தெடுக்கப்பட்டது. 1921 சூலை 28 முதல் இக்கட்சியின் தலைவராக அடொல்ஃப் ஹிட்லர் இருந்தார். செருமனிய அரசுத்தலைவர் 'போல் வொன் ஹின்டென்பேர்க் என்பவர் 1933-இல் இட்லரை நாட்டின் அரசுத்தலைவராகத் (சான்சிலர்) தேர்ந்தெடுத்தார். ஹின்டென்பேர்க்கின் மறைவிற்குப் பின் கட்சி இட்லரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தது.