![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/India-locator-map-blank.svg/langta-640px-India-locator-map-blank.svg.png&w=640&q=50)
தானூர்
From Wikipedia, the free encyclopedia
தானூர் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இங்கு ரயில் நிலையம் உள்ளது. முன்னர், போர்த்துக்கேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இது திரூர் வட்டத்தில், தானூர் மண்டலத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சி தானூர், பரியாபுரம் ஆகிய ஊர்களை உள்ளடக்கியது. இது 19.49 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. வடக்கில் பரப்பனங்காடி ஊராட்சியும், தெற்கில் தானாளூர், ஒழூர் ஊராட்சிகளும், மேற்கில் அரபிகடலும், கிழக்கில் நன்னம்பிரா, ஒழூர் ஊராட்சிகளும் உள்ளன. தான்னி மரங்கள் அதிகமாக இருந்த இடம் என்பதால் தான்னியூர் என்று பெயர் பெற்றது. பின்னர் மருவி தானூர் என்றானது.
விரைவான உண்மைகள்
— நகரம் — | |
அமைவிடம் | 10°58′N 75°52′E |
மாவட்டம் | மலப்புறம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 1 மீட்டர் (3.3 அடி) |
மூடு