தரவு (யாப்பிலக்கணம்)
From Wikipedia, the free encyclopedia
செய்யுளியலில், தரவு என்பது, செய்யுள் வகைகளுள் ஒன்றான கலிப்பாவின் முதல் உறுப்பு ஆகும். இது செய்யுளுக்கு முகவுரை போன்றது. இதற்கு எருத்தம் என்ற மற்றொரு பெயரும் உண்டு . எடுத்துக்கொண்ட பொருளை அறிமுகப்படுத்தும் பாங்கில் அமைந்தது. இது குறைந்தது மூன்று அடிகளையும், கூடிய அளவாகப் பன்னிரண்டு அடிகளையும் கொண்டு அமைந்திருக்கும்.
கலிப்பாவின் வகைகளுக்கு ஒப்பத் தரவுகளின் எண்ணிக்கை மாறுபடுவது உண்டு. பெரும்பாலும் ஒரு தரவே வருமாயினும், சில கலிப்பாக்களில் இரண்டு தரவுகளும் காணப்படுவது உண்டு. தரவு இல்லாமலே வரும் கலிப்பாக்களும் உண்டு.