தஞ்சோங் ரம்புத்தான்
பேராக் மாநிலத்தில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
தஞ்சோங் ரம்புத்தான் (மலாய்; ஆங்கிலம்: Tanjung Rambutan) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தின் கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். ’தஞ்சோங்’ என்றால் நிலக்கூம்பு. ’ரம்புத்தான்’ என்றால் முடி முளைத்தான் பழம்.
ஆள்கூறுகள்: 4°42′35″N 101°08′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
நிறுவப்பட்டது | 1892 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 26,550 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
முன்பு காலத்தில் இங்கு நிறைய முடி முளைத்தான் பழ மரங்கள் இருந்ததால் அப்பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது. மலேசியாவின் மிகப் பழமை வாய்ந்த மனநோய் மருத்துவமனை இங்கு தான் உள்ளது. அதன் பெயர் உலு கிந்தா பகாகியா மருத்துவமனை. (Hospital Bahagia Ulu Kinta). இந்த நகரம் ஈப்போ மாநகரில் இருந்து 16 கி.மீ தொலைவில் வட கிழக்கே இருக்கிறது.
அண்மைய காலங்களில் இந்த நகரம் மிகத் துரிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு மனநோய் மருத்துவமனை இருப்பதால் இந்த நகரத்தையும் மனநோயுடன் தொடர்பு படுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. பொதுவாகவே, மலேசியாவில் யாராவது சாதாரண மனித இயல்பு நிலைகளில் இருந்து மீறி வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டால், அவரைத் ’தஞ்சோங் ரம்புத்தான்’ என்று அழைப்பார்கள்.
அது ஒரு மனிதரின் மனிதத் தன்மைகளையும் அவருடைய சுய கௌரவத்தையும் இழிவு படுத்துவது போல் ஆகும். அந்த வழக்கம் இன்றைய நாட்களில் குறைந்து வருகிறது.