மருத்துவர்
From Wikipedia, the free encyclopedia
மருத்துவத் தொழிலை செய்பவர்கள் மருத்துவர் ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர் (Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து ஆண்டுகள் எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.
தொழில் | |
---|---|
பெயர்கள் | மருத்துவர் |
வகை | தொழில் |
செயற்பாட்டுத் துறை | மருந்து, உடல்நலம் |
விவரம் | |
தகுதிகள் | நீதிநெறி, மருத்துவம், பகுப்பாய்வு திறன், தெளிந்த சிந்தனை, நோயறிதல் திறன். |
தேவையான கல்வித்தகைமை | மருத்துவக் கல்வி |
தொழிற்புலம் | ஆய்வு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி, தொழில்துறை, பொது நலம் |
தொடர்புடைய தொழில்கள் | அறுவை மருத்துவர், குடும்பநல மருத்துவர், பல் மருத்துவர், பொதுநல மருத்துவர் |
முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்தப் பட்டறிவை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் வைத்தியர் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப்படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் சித்த மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், ஓமியோபதி மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.