யோகான்னசு கெப்லர்
From Wikipedia, the free encyclopedia
யோகான்னசு கெப்லர் (Johannes Kepler, ஜோகான்னஸ் கெப்லர், டிசம்பர் 27, 1571 – நவம்பர் 15, 1630), ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova (ஆசுட்ரோனோமியா நோவா) மற்றும் Harmonice Mundi (ஆர்மோனிசெ முண்டி) ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.
ஜொஹான்னெஸ் கெப்லர் | |
---|---|
1610ல் வரையப்பெற்ற ஜொஹான்னெஸ் கெப்லரின் தனியுருவப் படம் | |
பிறப்பு | (1571-12-27)திசம்பர் 27, 1571 Free Imperial City of Weil der Stadt, புனித உரோமைப் பேரரசு |
இறப்பு | நவம்பர் 15, 1630(1630-11-15) (அகவை 58) ரெஜென்ஸ்பர்க், Electorate of Bavaria, Holy Roman Empire |
வாழிடம் | Württemberg; Styria; Bohemia; Upper Austria |
தேசியம் | ஜெர்மன் |
துறை | வானியல், ஜோதிடம், கணிதம் and இயல் மெய்யியல் |
பணியிடங்கள் | University of Linz |
கல்வி கற்ற இடங்கள் | Tübinger Stift, University of Tübingen |
அறியப்படுவது | கெப்லரின் கோள் இயக்க விதிகள் Kepler conjecture |
கையொப்பம் |
கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராகி (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார்.
இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சேகன் (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார்.