![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f2/New_Delhi_Jama_Masjid.jpg/640px-New_Delhi_Jama_Masjid.jpg&w=640&q=50)
ஜாமா பள்ளி, தில்லி
From Wikipedia, the free encyclopedia
மஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, "உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியத்தில் ஒன்றாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் பொ.ஊ. 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பள்ளிவாசலின் முதல் இமாமான சையது அப்துல் கபூர் சா புகாரியால் இது திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜாமா மஸ்ஜித் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′3″N 77°13′59″E |
சமயம் | இஸ்லாம் |
ஆட்சிப்பகுதி | தில்லி |
மாவட்டம் | மத்திய தில்லி |
நிலை | பள்ளிவாசல் |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/Jama_Masjid%2C_Facade%2C_Domes_and_minarets%2C_Delhi%2C_India.jpg/640px-Jama_Masjid%2C_Facade%2C_Domes_and_minarets%2C_Delhi%2C_India.jpg)
முகலாய பேரரசின் தலைநகரான இப்போது பழைய டெல்லி என்று அழைக்கப்படும் ஷாஜஹானாபாத்தில் அமைந்துள்ள இது 1857 இல் பேரரசு மறையும் வரை முகலாய பேரரசர்களின் முக்கிய மசூதிகளில் ஒன்றாக செயல்பட்டது. ஜமா பள்ளி ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் இந்திய இசுலாமிய சக்தியின் அடையாளச் சின்னமாக கருதப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் பல முக்கிய காலகட்டங்களில் இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகவும் இருந்தது. இந்தப் பள்ளிவாசல் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. இது டெல்லியின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும், இது பழைய டெல்லி நெறிமுறைகளுடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.