சோழரின் வட இந்தியப் பயணம்
From Wikipedia, the free encyclopedia
சோழரின் வட இந்தியப் பயணம் இடைக்கால் சோழ அரசன் இராசேந்திர சோழனால் 1019 க்கும் 1024 க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றது. சில வரலாற்றாளர்கள் இப்பயணம் கங்கையைத் தரிசிக்கச் சென்ற யாத்திரை எனவும், பலர் இது கிழக்கு இந்தியாவை பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட முற்றிலுமான படை நடவடிக்கை எனக் கருதுகின்றனர். இப்பயணம் வெங்கி - கிழக்கு சாளுக்கியம், கலிங்க நாடு, ஒடிசா மற்றும் வங்காளம் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் கங்கை வரை இடம்பெற்றது. இப்பயணத்தில் முக்கிய நிகழ்வாக பாலப் பேரரசின் அரசன் முதலாம் மகிபலவை வெற்றி கொண்டமை எனக் கருதப்படுகின்றது.