சுந்தர சண்முகனார்
எழுத்தாளர், தமிழாசிரியர் / From Wikipedia, the free encyclopedia
சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர். இவர் ஆற்றுப்படுகை அணுகுமுறையில் (River basin approach) பண்பாட்டு ஆய்வைத் தொடங்கி வைத்த முன்னோடி. மற்றும் இவர் தமிழாசிரியர்களுக்கு தமிழ் தவிர வேறு எதுவும் தெரியாது என்னும் மாயத்தோற்றத்தைத் தகர்த்தவர்களில் ஒருவர்.
விரைவான உண்மைகள் சுந்தர சண்முகனார், பிறப்பு ...
சுந்தர சண்முகனார் | |
---|---|
புதுப்படைப்புக் கலைஞர் | |
பிறப்பு | சு. சண்முகம் 13 சூலை 1922 புதுவண்டிப்பாளையம், கடலூர் |
இறப்பு | 30 அக்டோபர் 1997 புதுச்சேரி |
இருப்பிடம் | புதுச்சேரி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | வித்துவான், கலை இளவர், ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பணியகம் | 1 சிவஞான பாலய அடிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம் 2 பெத்தி செமினார் பள்ளி, புதுச்சேரி 3 அரசினர் ஆசிரியர் பயிற்சி நடுவம், புதுச்சேரி 4 தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் |
அறியப்படுவது | தமிழாய்வு |
பட்டம் | 1 இயற்கவி 2ஆராய்ச்சி அறிஞர் 3 செந்தமிழ்ச் செம்மல் 4 செந்தமிழ்க் கொண்டல் 5 தமிழ்ச் சான்றோர் 6 திருக்குறள் நெறித்தோன்றல் 7 குறளாயச் செல்வர் 8 தமிழ் ஆய்வுக்கடல் 9 தமிழ்ப் பேரவைச் செம்மல் |
சமயம் | சைவம் |
பெற்றோர் | சுந்தரம் - அன்னபூரணி |
வாழ்க்கைத் துணை | விருத்தாம்பிகை |
பிள்ளைகள் | மகன்: சு ச அறவணன்; மகள்: அங்கயற்கண்ணி |
உறவினர்கள் | 1 முதுபெரும்புலவர் நடேசனார் 2 பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் |
மூடு