சீர் (யாப்பிலக்கணம்)
From Wikipedia, the free encyclopedia
சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை.
இப்பாடல் ஒரு அருமையான கலிவிருத்தம்;
கலிவிருத்தம்
கனி 3 / மா
- நத்தார்படை ஞானன்பசு வேறின்நனை கவிழ்வாய்
- மத்தம்மத யானையுரி போர்த்தமண வாளன்
- பத்தாகிய தொண்டர்தொழும் பாலாவியின் கரைமேல்
- செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே! 1 - 080 திருக்கேதீச்சரம், ஏழாம் திருமுறை
மேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன.