சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு
From Wikipedia, the free encyclopedia
229A இலக்கம் உடைய சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு (Chinabay) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 525 குடும்பத்தைச் சேர்ந்த 2102 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.
முன்னர் சீனநாட்டவர் கடல் வாணிபத்தின் பொருட்டு திருகோணமலையில் இப்பகுதியில் குடியேறியதாலேயே இப்பகுதியானது சீனக்குடா என்றழைக்கப்படுகின்றது. இன்றும் சீனர்களின் வழித்தொன்றல்கள் இங்கு உள்ளபோதும் பெரும்பாலானவர்கள் இலங்கையர்களுடன் திருமணம் செய்து இலங்கையர்கள் ஆகிவிட்டார்கள்.
மேலதிகத் தகவல்கள் பிரிவினர், எண்ணிக்கை ...
பிரிவினர் | எண்ணிக்கை |
---|---|
ஆண் | 1062 |
பெண் | 1040 |
18 வயதிற்குக் கீழ் | 729 |
18 வயதும் 18 வயதிற்கு மேல் | 1373 |
பௌத்தர் | 1100 |
இந்து | 617 |
இசுலாமியர் | 175 |
கிறீஸ்தவர் | 210 |
ஏனைய மதத்தவர் | 0 |
சிங்களவர் | 1215 |
தமிழர் | 687 |
முஸ்லிம் | 175 |
ஏனையோர் | 25 |
மூடு