சாமுவேல்
From Wikipedia, the free encyclopedia
சாமுவேல் (ஆங்கிலம்:Samuel; /ˈsæm.juː.əl/; எபிரேயம்: שְׁמוּאֶל, தற்கால Shmu'el திபேரியம் Šəmûʼēl; கிரேக்க மொழி: Σαμουήλ Samouēl; இலத்தீன்: Samvel; அரபு மொழி: صموال Ṣamawal; Strong's: Shemuwel) என்பவர் எபிரேய விவிலியத்தின் சாமுவேல் நூல் குறிப்பிடும் பண்டைய இசுரேலின் தலைவர் ஆவார். இவர் குரானில் பெயர் குறிப்பிடாமல் இறைவாக்கினராக குறிப்பிடப்பட்டுள்ளார்.[1]
விரைவான உண்மைகள் சாமுவேல், இறப்பு ...
மூடு
யூத போதக இலக்கியத்தின்படி இவர் கடைசி எபிரேய நீதித்தலைவரும், இசுரேல் நாட்டினுள் இறைவாக்குரைத்த முதலாவது பெரிய இறைவாக்கினரும் ஆவார். சாமுவேல் நூலின்படி, இவர் முதலிரு இசுரேலிய அரசர்களான சவுலையும் தாவீதையும் அரசர்களாக எண்ணெய் பூசி அருட்பொழிவு செய்தார்.