ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சாது மிரண்டால் (Sadhu Mirandal) 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், கல்பனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சாது மிரண்டால் | |
---|---|
இயக்கம் | திருமலை மகாலிங்கம் |
தயாரிப்பு | ஏ. பீம்சிங் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் நாகேஷ் கல்பனா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
நீளம் | 3996 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நவம்பர் 13, 1958 சென்னையில் வங்கி அதிகாரியான சூர்யநாராயணா,அவரது நண்பர் நாராயண சுவாமி மற்றும் ஜோகிந்தர் ஆகியோரால் பணத்திற்காக கொலை செய்யப்பட்டர்.இந்த சம்பவம் " சூரியநாராயண கொலை வழக்கு" என்று கூறப்பட்டது.மேலும் பீம்சிங்கை திரைகதை எழுத தூண்டியது.இதனை அவர் வெங்கடேசுவர சினிடோன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்தார்,இவரது உதவியாளர்களான திருமலை மற்றும் மகாலிங்கம் அகியோர் இந்த திரைப்படத்தை இயக்கினர்.வசனங்களை சோமநாதன் எழுதியுள்ளார்.படத்தின் இறுதி நீளம் 3,996 மீட்டர்.
இந்த திரைப்படத்திற்கு டி.கே.ராமமூர்த்தி இசையமைத்தார்.[3] பாடல் வரிகளை ஆலங்குடி சோமு மற்றும் தஞ்சை வனன் எழுதியுள்ளார்.ராம முர்த்தி முன்னதாக ம.சு.விஸ்வநாதனுடன் இசையமைத்தார்.இது அவர் தனிச்சையாக இசையமைத்த முதல் திரைப்படமாகும்.
சாது மிராண்டல் 14 ஏப்ரல் 1966 இல் வெளியிடபட்டது. இந்த திரைப்படத்தை சன் பீம் நிறுவனம் விநியோகித்தது. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.