நேர்பாலீர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
நேர்பாலீர்ப்பு (Homosexuality), ஒருபாலீர்ப்பு, தன்பாலின ஈர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கை என்பது ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலீர்ப்பைக் குறிக்கும்.
ஒரு நபர் தன் பாலினத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் மீது காதல், ஈர்ப்பு ஏற்படுவதை நேர்பாலீர்ப்பு என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
நேர்பாலீர்ப்பு என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள் உட்பட காலம் தோன்று இயற்கையாக இருந்து வந்துள்ளது என்பதற்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் உள்ளது, ஆனால் பொதுவாக சில மதங்களின் செயற்பாட்டால் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப்பட்டது. இன்றளவும் இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதத்தை தனது நாட்டின் முதல் மதமாக ஏற்ற நாடுகளில் நேர்பாலீர்ப்பு என்பது அவமானகரமான விடயமாகவும் சட்டவிரோதமானதாகவும் உள்ளது.
செப்டம்பர் 6, 2018 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றம் நேர்பாலீர்ப்பு குற்றமற்றது என்று தீர்ப்பு வழங்கியது. இலங்கையில் அடிப்படையில் நேர்பாலீர்ப்பு குறித்த வழக்குகள் பதிவது அரிது. எனினும் அந்நாட்டு உச்சநீதிமன்றதில் இதுகுறித்த தீர்ப்பு எதுவும் இதுவரை வந்தது இல்லை.