ச. வையாபுரிப் பிள்ளை
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் / From Wikipedia, the free encyclopedia
ச. வையாபுரிப் பிள்ளை (எஸ். வையாபுரிப் பிள்ளை, 12 அக்டோபர் 1891 – 17 பெப்ரவரி 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக் கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர்.
விரைவான உண்மைகள் ச. வையாபுரிப் பிள்ளை, பிறப்பு ...
ச. வையாபுரிப் பிள்ளை | |
---|---|
![]() 1936 இல் வையாபுரிப் பிள்ளை | |
பிறப்பு | (1891-10-12)12 அக்டோபர் 1891 சிக்க நரசய்யன் கிராமம், நெல்லை மாவட்டம், தமிழ் நாடு |
இறப்பு | 17 பெப்ரவரி 1956(1956-02-17) (அகவை 64) தமிழ் நாடு, ![]() |
பணி | தமிழறிஞர், பதிப்பாளர், வழக்கறிஞர் |
மூடு